கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 28, 2017, 11:43 AM IST
கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் title=

கோவை: கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலைய அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், இடைநிலை ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோவை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலைய இயக்குநருக்கு மர்ம நபர் அனுப்பிய கடிதத்தில், கோவை விமான நிலையத்தை தகர்க்கப்போவதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News