முதல்வர் வீட்டின் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி!

உபி முதல்வர் வீட்டின் முன்பு, ஆளும் கட்சி MLA தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி தன் குடும்பத்தோடு இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 8, 2018, 04:16 PM IST
முதல்வர் வீட்டின் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி! title=

லக்னோ: உபி முதல்வர் வீட்டின் முன்பு, ஆளும் கட்சி MLA தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி தன் குடும்பத்தோடு இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

உத்திரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டிற்கு முன்பு, இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்கையில்... பாஜக MLA குல்தீப் சிங் சென்கர் மற்றம் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிகாரிகள் பலரிடம் புகார் அளித்தப்போதிலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. முதல்வரிடம் தெரிவித்த போதிலும் தகுந்த நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்ளுவேன் என தெரிவித்துள்ளார்.

இன்று காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கௌதம் பள்ளி காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

இந்த விவாகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட MLA குல்தீப் சிங் தெரிவிக்கையில்... என்னை சுற்றி சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

Trending News