டெல்லி IIT-ல் பயில இரண்டு கிராமபுர மாணவர்கள் தேர்வு!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் இருந்து NIT மற்றும் IIT -யில் பயில்வதற்காக 21 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Last Updated : Jan 21, 2018, 01:24 PM IST
டெல்லி IIT-ல் பயில இரண்டு கிராமபுர மாணவர்கள் தேர்வு! title=

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் இருந்து NIT மற்றும் IIT -யில் பயில்வதற்காக 21 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் டெல்லி IIT-க்கு குதுலேகா மற்றும் ஜார்கும் என்னும் இரு கிராமங்களில் இருந்து இரண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்!

தீபக் குமார் மற்றும் நித்திஷ் பன்னிர் ஆகிய இந்த இருவரும் மிகவும் பின்தங்கிய வளர்சியில் உள்ள மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்ககது.

இதுகுறித்து ஜஷ்பூரின் கலெக்டர் தெரிவிக்கையில்... ஏழை குடும்ப மாணவர்களின் தேர்வு வெற்றிப் பெற்றது பெருமிதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

எதிர்கால தலைமுறையினருக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்குழந்தைகளுக்கு உதவுவதில் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எந்தவித பற்றாக்குறையும் இல்லாது மேளான்மை பார்த்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News