ஆங்கிலத்தில் பேசியதால் அடி உதை: 3 பேர் கைது!

Last Updated : Sep 12, 2017, 10:39 AM IST
ஆங்கிலத்தில் பேசியதால் அடி உதை: 3 பேர் கைது! title=

தலைநகரம் டெல்லியில் ஆங்கிலத்தில் உரையாடிய வரை அடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொய்டாவை சேர்ந்த வருண் குலதி (22) என்பவர் தனது நண்பர் ஒருவரை டிராப் செய்வதற்காக டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். 

அப்போது அவர் தனுடைய நண்பருடன் ஆங்கிலத்தில் பேசிய வருணை, 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து "எதற்காக ஆங்கிலத்தில் உரையாடுகிறாய்" என்று கேட்டு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் வாக்குவாதம் முற்றி அந்த 5 பேர் வருணை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த 5 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று நடந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Trending News