பிரமோஸ் ஏவுகண்: சீனா எச்சரிக்கை

Last Updated : Aug 22, 2016, 06:58 PM IST
பிரமோஸ் ஏவுகண்: சீனா எச்சரிக்கை title=

வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சீனா,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை குழு கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டது. சீனா உரிமை கொண்டாடும் அருணாச்ச பிரதேசத்தில் பிரமோஸ் ஏவுகணை நிறுவப்பட உள்ளது.

இது தொடர்பாக சீன ராணுவத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், எல்லையில், பிரமோஸ் ஏவுகணையை நிறுவுவது, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மற்றும் யுனான் மாகாணங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நிறுவுவதால், இரு நாட்டு உறவில் போட்டி மற்றும் முரண்பாடு ஏற்படுவதுடன், இரு நாட்டு உறவில் நிலவும் சூழலில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படும் என கூறியுள்ளது.

Trending News