3 வயது இரட்டையர்கள் வாஷிங் மெஷினில் மூழ்கி மரணம்

ஒரு குறும்பு சம்பவத்தில் டெல்லியில் சனிக்கிழமை மத்தியம் வாஷிங் மெஷினில் மூழ்கி மூன்று வயது இரட்டை சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மாக்களிடையே பரபரப்பை ஏற்படித்தியிருக்கிறது. 

Last Updated : Feb 26, 2017, 10:56 AM IST
3 வயது இரட்டையர்கள் வாஷிங் மெஷினில் மூழ்கி மரணம் title=

புதுடெல்லி: ஒரு குறும்பு சம்பவத்தில் டெல்லியில் சனிக்கிழமை மத்தியம் வாஷிங் மெஷினில் மூழ்கி மூன்று வயது இரட்டை சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மாக்களிடையே பரபரப்பை ஏற்படித்தியிருக்கிறது. 

மேற்கு டெல்லி ரோகிணி அவந்திகா அபார்ட்மெண்ட் செக்டர்-1 பகுதியில் வசித்துவருகிறார்கள் ரவீந்தர், ராக்கி தம்பதியனர். அவர்களுக்கு நிஷாந்த் மற்றும் நக்‌ஷய் என்ற இரட்டையர்கள் இருந்தனர்.

இந்நிலையில் ராக்கி வாஷிங் மெஷினில் தண்ணீர் ஊற்றியுள்ளார். அது 15 லீட்டர் அளவு இருக்கக்கூடும் என தெரிகிறது. அவர் வாஷிங் பவுடர் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். 6 நிமிடங்கள் பிறகு வீட்டிற்கு வந்ததும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளைக் வாஷிங் மெஷினில் கிடந்திருப்பது கண்டார். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழதைகள் இருவரும் இறந்து விட்டனர் என மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

Trending News