'ஏன் கிறிஸ்துவ தேசியவாதிகள் என குறிப்பிட மறுக்கிறார்கள்...' - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவை குறிப்பிடும்போது, மட்டும் ஏன் இந்து தேசியவாதிகள் என வெளிநாட்டு பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வியெழுப்பி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 29, 2023, 08:16 AM IST
  • உலகத்துடன் இணைந்து இருக்க நினைக்கும் தேசியவாதிகள், நாங்கள் - ஜெய்சங்கர்
  • கடந்த 9 ஆண்டுகளில் தேசியவாதம் அதிகமாகியுள்ளது - ஜெய்சங்கர்
'ஏன் கிறிஸ்துவ தேசியவாதிகள் என குறிப்பிட மறுக்கிறார்கள்...' - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் title=

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஆங்கிலப் புத்தகமான "The India Way: Strategies for an Uncertain World" என்ற புத்தகத்தை மராத்தி மொழியில் 'பாரத் மார்க்' என்ற பெயரில் மொழிபெயர்ப்பட்டது. மராத்தி புத்தக்கத்தின் அறிமுக விழா நேற்று (ஜன. 28) மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்றது. 

ஜெய்சங்கரின் புத்தகத்தின் மராத்தி பதிப்பை மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். ஜெய்சங்கர், அதில் தான் பெருமைப்படுவதாகவும், மன்னிப்பு கேட்பதற்கு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை என்றும் கூறினார்.

பிபிசி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில்,"இது ஒரு குறிப்பிட்ட மதிப்பிழந்த கதையை பரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரச்சார பகுதி என்று நாங்கள் நினைக்கிறோம். சார்பு மற்றும் புறநிலை இல்லாமை மற்றும் வெளிப்படையாகத் தொடரும் காலனித்துவ மனநிலை ஆகியவை இதில் தாமதமாக தெரியும்" என்றார். 

அந்த வகையில், The Modi Question என்ற பிபிசியின் ஆவணப்பட சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதுகுறித்து மறைமுகமாக சில கருத்துகளை உதிர்த்துள்ளார். "கடந்த 9 வருடங்களைப் (மோடி பிரதமர் ஆனதில் இருந்து) பார்த்தால், அரசாங்கமும் அரசியலும் தேசியவாதமாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இதில் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். அதே தேசியவாதிகள் வெளிநாடுகளுக்கும் உதவி செய்துள்ளனர். மற்ற நாடுகளில் பேரழிவு சூழ்நிலைகளில் முதல் ஆளாக இதே தேசியவாதிகள்தான் உடன் நின்றனர்.

மேலும் படிக்க | Madhya Pradesh Plane Crash: 2 போர் விமானங்கள் மோதல்... ஒரு விமானி பலி!

வெளிநாட்டு செய்தித்தாள்களை நீங்கள் படித்தால், அவர்கள் எப்போதும், இந்தியாவை குறிப்பிட 'இந்து தேசியவாத கருத்து' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த விரும்புகிறார்கள். நம்மை இந்து தேசியவாதிகள் என குறிப்பிடும் அவர்கள், அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ கிறிஸ்துவ தேசியவாதிகள் என்று சொல்லமாட்டார்கள். இந்த சொற்கள் நமக்கு என்றே ஒதுக்கப்பட்டவை. 

எனவே அடுத்த முறை நீங்கள் அதைப் படிக்கும்போது, ​இந்தியா உலகத்துடன் இணைந்திருக்க அதிகம் தயாராகி வருகிறது என்பதை அவர்கள் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை. அதனை புரிந்தகொள்ளாத அவர்கள் இந்தியாவை எவ்வளவு தவறாகப் படிக்கிறார்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

இந்த G20 மாநாட்டில் 200 கூட்டங்கள் இருக்கும் என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறோம். இந்த 200 சந்திப்புகள் மூலம், உலகுக்குக் காட்ட விரும்புகிறோம், தயவுசெய்து, உலகமே, இந்தியாவைப் பார்க்க வாருங்கள். இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பாருங்கள், இந்தியாவில் உலகிற்கு எவ்வளவு உற்சாகமும் நேர்மறை உணர்வும் இருக்கிறது என்பதைப் பாருங்கள்" என குறிப்பிட்டார். 

மேலும், ராகுல் காந்தியை தாக்கிய ஜெய் ஷங்கர்,"ஏன் எதிர்க்கட்சிகள், 1962ஆம் ஆண்டில் இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது குறித்து பேசக்கூடாது" என்றார். 

மேலும் படிக்க | BBC Documentary Controversy: குஜராத் கலவர வழக்கு தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் எதிரொலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News