ஜம்முவில் ராணுவம் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி!

ஜம்மு காஷ்மீரில், 5 தற்கொலைப் படை தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jan 15, 2018, 11:19 AM IST
ஜம்முவில் ராணுவம் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி! title=

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது துலஞ்சா கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்தது. 

இந்தியாவுக்குள் அவர்களுடன் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலியாயினர். இவர்கள் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தற்கொலை படையினர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மேலும் தொடர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Trending News