நொய்டா கட்டிட இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் தற்போது வரை பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2018, 01:35 PM IST
நொய்டா கட்டிட இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு! title=

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் தற்போது வரை பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென அதன் அருகாமையில் இருந்த கட்டிடம் மீது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைகாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News