டெல்லி ஐகோர்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

Last Updated : Aug 17, 2017, 01:57 PM IST
டெல்லி ஐகோர்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் title=

வியாழக்கிழமையான இன்று காலை டெல்லி போலீசாருக்கு தொலைபேசியில் மர்ம நபர் டெல்லி ஐகோர்டு வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சில மணிநேரத்தில் வெடிக்க உள்ளது என்று மர்ம நபர் கூறினான். 

இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி போலீசார் கடைசி வரை எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் டெல்லி ஐகோர்டு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

மர்ம கால் வடக்கு டெல்லியிலிருந்து வந்ததாகவும், அந்த எண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாங்கப்பட்டதும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தற்போது அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தன. மேலும் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Trending News