காஷ்மீர் துப்பாக்கிச்சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

Last Updated : Jun 21, 2017, 11:13 AM IST
காஷ்மீர் துப்பாக்கிச்சூடு -  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! title=

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு. இரண்டு 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று காலை மீண்டும் அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.  

Trending News