INS Kalvari: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது. 

Last Updated : Dec 14, 2017, 09:11 AM IST
INS Kalvari: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்  title=

நம் கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் நீர்முழ்கி போர்க்கப்பலை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். #INSKalvari முதலில் உருவாக்கப்பட்ட இந்திய Scorpene வர்க்க நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு அனுப்பப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

Trending News