ஹரியானாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!

ஹரியானாவில் இளம்பெண் ஒருவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 18, 2018, 12:43 PM IST
ஹரியானாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!! title=

ஹரியானாவில் இளம்பெண் ஒருவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில்  உள்ள பதேஹாபாத்தின் பூதன் கிராமத்தில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் தனிமை நிலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்னை கற்பழித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 19வயது மாணவியை நான்கு பேர் கொண்டகும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Trending News