மும்பை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு பேர் பலி; 50 பேர் காயம்

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்ததால் இதுவரை ஆறு பேர் உயிரிழப்பு. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2018, 08:38 PM IST
மும்பை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு பேர் பலி; 50 பேர் காயம் title=

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்தலில், இதுவரை ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 147 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 


மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்தலில் இருவர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. 

 

 


இன்று மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்ததால், அங்கு பெரும் பரபரபப்பு ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. தீ விபத்து ஏற்ப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 தீ அணைப்பு வாகனம் ஈடுபட்டு உள்ளன. அவரச உதவிக்காக 16 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு மீட்பு வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

 

 

Trending News