IPL 2018: ஐதரபாத் அணியை தும்சம் செய்த அம்பத்தி ராயுடு!

IPL 2018 தொடரின் 46-வது போட்டியில் சென்னை அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது!

Last Updated : May 13, 2018, 07:34 PM IST
IPL 2018: ஐதரபாத் அணியை தும்சம் செய்த அம்பத்தி ராயுடு! title=

IPL 2018 தொடரின் 46-வது போட்டியில் சென்னை அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 46-வது போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

இதனையடுத்து ஐதராபாத் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 79(49) ரன்கள் குவித்தார். இவரையடுத்து வில்லியம்சன் 51(39) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தீபக் ஹூடா மற்றும் ஷாகிப் உல் ஹாசன் இறுதியல் அதிரடி காட்டினர்.

இதனால் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். வாட்சன் 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். அம்பத்தி ராயுடு 62 பந்துகளில் 100 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவருக்கு துணையாக கேப்டன் டோனி 14 பந்துகளில் 20 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்படி ஆட்டத்தில் 19-வது ஓவர் முடியும் தருவாயில் சென்னை அணி 180 ரன்கள் குவித்து IPL 2018 தொடரில் 8-வது வெற்றியினை பதிவு செய்தனர். 

Trending News