IPL_2018: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!!

ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..! 

Last Updated : Apr 22, 2018, 06:41 PM IST
IPL_2018: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!! title=

கொல்கத்தா: ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னைஅணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்ததையடுத்து ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..! 

11-வது ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு துவங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன. 

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது.

அதே போல் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் உள்ளது.இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது. 

இந்நிலையில், அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் டோணியும் அதிரடி காட்டி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..! 

Trending News