மழை வெள்ளத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை மீட்டது NDRF; மீட்புப் பணி தொடர்கிறது

கடந்த 6 நாட்களாக பெய்த 50 சென்டிமீட்டர் மழையால் சென்னையின் பெரும் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை NDRF வீரர்கள் மீட்டுள்ளனர். 13 தேசிய பேரிடர் மீட்புப் படை  குழுக்கள் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுகின்றன.

Also Read | பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

1 /5

வியாழன் மதியம், இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், சென்னையின் புறநகரில் உள்ள திருப்போரூர்க்கு NDRF குழு விரைந்தது. மோசமான வானிலைக்கு மத்தியில், மின் பரிமாற்றக் கோபுரத்தில் சிக்கிக் கொண்ட மூன்று மின்சார வாரிய பணியாளர்களை மீட்டனர்

2 /5

சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும், பம்ப் செய்வதற்கும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குழுவினர் போராடி வருகின்றனர். 

3 /5

வெள்ளத்தால் பாதிக்கப்படும் அடையாறு, தாம்பரம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

4 /5

NDRF குழுக்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நீரால் சூழப்பட்டுள்ள வீடுகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான உணவு மற்றும் பால் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். 

5 /5

மீட்கப்பட்டவர்கள், இடுப்பு ஆழம் வரை நீர் உள்ள இடங்களில் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பொன்னேரி, முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற இடங்களில் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.