யாரும் எவர் காலிலும் விழக்கூடாது-கிரண்பேடி

Last Updated : May 30, 2016, 03:50 PM IST
யாரும் எவர் காலிலும் விழக்கூடாது-கிரண்பேடி title=

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிரண்பேடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, அவரது கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். அனைவரும் கிரண்பேடிக்கு மலர்க்கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது கிரண்பேடிக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயவேணி சால்வை அணிவித்து விட்டு பூங்கொத்து வழங்கி கிரண்பேடியின் காலில் விழுந்து தொட்டு வணங்கினார். அதையடுத்து எம்எல்ஏ விஜயவேணி காலை தொட்டு கிரண்பேடியும் வணக்கினார். சற்று அதிர்சியடைந்தவராக காணப்பட்டார் விஜயவேணி எம்எல்ஏ.

அதையடுத்து எம்எல்ஏ விஜயவேணியிடம் "யாரும் எவர்காலிலும் விழக்கூடாது என தெரிவித்தார்"

Trending News