38 நிமிட நிலநடுக்கத்தில் அதிர்ந்து போன மக்களவை!!

தனது 38 நிமிட உரையால் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட்-ஆனா ராகுல்காந்தி! 

Last Updated : Jul 20, 2018, 04:45 PM IST
38 நிமிட நிலநடுக்கத்தில் அதிர்ந்து போன மக்களவை!! title=

தனது 38 நிமிட உரையால் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட்-ஆனா ராகுல்காந்தி! 

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதியளித்ததை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு துவங்குகிறது.    

இதையடுத்து, ஒவ்வொரு எம்.பி-களும் பேசுவதற்கு நேரம் கொடுக்கபட்டிருந்தது. மக்களவையில் ராகுல்காந்தி பேசியது ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது! 

மக்களவையில் அவர் பேசியதாவது...! 

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிப்படைந்தனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பிரதமர் மோடி மக்களை ஏமாற்றியுள்ளார். விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய்யான வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

நான் பிரதமரில்லை; பிரதம சேவகன் என்றார் மோடி. ஆனால், அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை.  பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார் என குற்றம் சாட்டினார். 

மேலும், அவர் பேசுகையில்; ஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப்பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்க வேண்டும் என ஆவேச கேள்வி எழுப்பினார். 

இதை தொடர்ந்து, அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் பேசத்துவங்கிய ராகுல்காந்தி; என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆட்சியின் போது அதிகரித்துள்ளது. நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சர் ஒவ்வொருவருக்கும் தொடர்பு இருக்கும் பொது பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்?. நான் நன்றாகப் பேசுவதாக பாஜக எம்பிக்கள் சற்றுமுன் என்னிடம் கூறினர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள் என ஆவேசத்துடன் ராகுல்காந்தி உரையாற்றினார். 

இந்த 38 நிமிட உரையால் மக்களவையை அதிரவைத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி! 

 

Trending News