இந்தியாவில் 5 ஆடுகள வடிவ அங்காடிகளை திறக்கும் Adidas!

பிரபல விளையாட்டு ஆடை விற்பனையாளர் Adidas ஆனது 5 புதிய ஆடுகள வடிவ அங்காடிகளை திறக்க திட்டமிட்டுள்ளது!

Last Updated : May 21, 2018, 11:42 AM IST
இந்தியாவில் 5 ஆடுகள வடிவ அங்காடிகளை திறக்கும் Adidas! title=

பிரபல விளையாட்டு ஆடை விற்பனையாளர் Adidas ஆனது 5 புதிய ஆடுகள வடிவ அங்காடிகளை திறக்க திட்டமிட்டுள்ளது!

முன்னதாக கடந்த சனிக்கிழமை புதுடெல்லியில் தனது முதல் ஆடுகள வடிவ விற்பனை அங்காடியினை Adidas திறந்துவைத்தது. இந்த நிகழ்ச்சியில் Adidas நிறுனம செயல்திட்ட அதிகாரி தெரிவிக்கையில் வரும் 2019 ஆண்டு முதல் திறக்கப்படும் புதிய விற்பனை அங்காடிகள் ஆடுகள வடிவில் அமைக்கப்படும், மேலும் இந்த வடிவமானது US, UK, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருப்பது போலவே அமைக்கப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமைப்பானது உலகளாவிய அமைப்பாகும். குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான விற்பனை அங்காடிகள் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது Adidas நிறுவனம் அறிமுகம் செய்கிறது என தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து இன்னும் இரண்டு ஆண்டிற்குள், தற்போது இருக்கும் அங்காடிகளையும் ஆடுகள வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதிக்குள் 4-5 ஆடுகள வடிவ விற்பனை அங்காடிகளை திறக்க Adidas நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள ஆடுகள வடிவ அங்காடியில் ஓட்டப்பயிற்சி, கால்பந்தாட்ட பயிற்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் Adidas நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் ரூ.1,100 கோடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News