சாம்பியன்ஸ் டிராபி 2017: அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

Last Updated : Jun 13, 2017, 10:00 AM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் title=

சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் நேற்றுடன் நிறைவடைகிறது. கார்டிப்பில் நேற்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதின.

இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது. 

237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கியது பாகிஸ்தான் அணி. 

இதையடுத்து 44.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 

Trending News