தன்னுடன் பயிலும் பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல்!

உத்தரப்பிரதேசத்தில் 9-ம் வகுப்பு மாணவன் அவருடன் பயிலும் சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Mar 20, 2018, 09:39 AM IST
தன்னுடன் பயிலும் பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல்! title=

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகக் அந்த மாணவி புகார் கூறியுள்ளார். 

அந்த மாணவன் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் மாணவன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்த மாணவன் பல முறை தன்னை அடித்ததாகவும் ஒருநாள் எனது தந்தையை சந்தித்து என் மீது ஆசிட்டை வீசி விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுளார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

Trending News