மீனவர்கள் 10 பேர் படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை

Last Updated : Feb 7, 2017, 09:56 AM IST
மீனவர்கள் 10 பேர் படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை title=

ராமேசுவரம், தங்கச்சி மடம் பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை விரித்து, மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் மீனவர்கள் விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தி மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

அதில் இருந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்களால் ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending News