விரைவில் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு: முதல்வர்

Last Updated : Sep 21, 2017, 12:26 PM IST
விரைவில் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு: முதல்வர் title=

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர்:-

கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவின் கீழ், 100 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள் மேலும் தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் துவங்கப்படும். என்று கூறி முதல்வர் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

 

 

Trending News