பாஜகவிலிருந்து விலகிய சரவணன்; அதிமுகவில் இணைந்தார்

பாஜகவிலிருந்து விலகிய சரவணன் திமுகவில் சேரவிருக்கிறார் என கூறப்பட்ட சூழலில் அவர் அதிமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 4, 2023, 12:30 PM IST
  • திமுகவிலிருந்து விலகிய சரவணன் அதிமுகவில் ஐக்கியமானார்
  • பின்னர் பாஜகவிலிருந்து விலகினார்
  • தற்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார்
 பாஜகவிலிருந்து விலகிய சரவணன்; அதிமுகவில் இணைந்தார் title=

திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணியிருந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பிறகு பாஜக சார்பாக களமிறங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து பயணப்பட்டுவந்தார் டாக்டர் சரவணன். இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தச் சம்பவம் நடந்த அன்று நள்ளிரவே அமைச்சர் பிடிஆரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் டாக்டர் சரவணன்.

பிடிஆரை நேரில் சந்தித்ததை அடுத்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் சரவணன். இதனால் தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருந்த அவருக்கு தனது மகன் திருமணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனை பயன்படுத்தி கட்சி பேரம் பார்க்காமல் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்தார்.

அதன்படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், அதிமுகவைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களில் இருந்து நடிகர், நடிகைகள்வரை கலந்துகொண்டனர். குறிப்பாக திருமணத்தை பிடிஆர் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

Palanisamy

இதனால் திமுகவில் டாக்டர் சரவணன் மீண்டும் ஐக்கியமாகலாம் என கணிக்கப்பட்டது. மேலும் அதற்கான நடவடிக்கையை அமைச்சர் மூலம் சரவணன் செய்துவருகிறார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முன்னதாக, சரவணனின் மகன் திருமணத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. அவர் அனுப்பியிருக்கும் வாழ்த்து மடலில், “அன்புடையீர் வணக்கம்! தங்களின் மணவிழா அழைப்பிதழ் பெற்று மனமகிழ்ச்சி அடைந்தேன். ‘இயல்பிலான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வருள் எல்லாம் தலை’ என்று அய்யன் திருவள்ளுவர் வகுந்தளித்திருக்கும் இல்வாழ்வின் இலக்கணம் உணர்ந்து.

தமிழும் அமுதம் போல், பெரியாரும் பகுத்தறிவும் போல், அண்ணாவும் கற்றலும் போல், கலைஞரும் கழகமும் போல், மணமக்கள் பல்லாண்டு காலம் பலரும் போற்றும் இணையராக இல்லறம் காண விழைகிறேன். அனைத்து செல்வங்களும் பெற்று வீட்டுக்கு விளக்காகி, நாட்டுக்கு ஒளி ஏற்றி வாழ்வாங்கு வாழ்ந்திட எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆவினில் முறைகேடு - 47 பேரின் பணி நியமனம் ரத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News