துவங்கியது அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் இன்று முதல் துவங்குகிறது!

Last Updated : Jun 11, 2018, 01:43 PM IST
துவங்கியது அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு! title=

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் இன்று முதல் துவங்குகிறது!

பணியிட மாற்றம் கோறும் பள்ளி ஆசிரியருகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று (ஜூன் 11) மற்றும் நாளை (12-ஆம் தேதிகளில்) துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்து இருந்தது.

இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பிய அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்தனர்.

அதேப்போல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணங்களைப் பெற்று விண்ணப்பித்தனர். 

இந்நிலையில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூன் 11-ஆம் நாள்) துவங்குகிறது. இதனையடுத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 12-ஆம் நாள்) துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்தாய்வானது வரும் ஜூன் 21 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News