மார்ச் இறுதியில் ''ஜிஎஸ்எல்வி'' விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ!

மார்ச் இறுதியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 

Last Updated : Feb 14, 2018, 07:04 PM IST
மார்ச் இறுதியில் ''ஜிஎஸ்எல்வி'' விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ! title=

மார்ச் மாதம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 ராக்கெட் மூலமாக சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 

அதேபோன்று, ஏப்ரல் மாதம் ஐ.ஆர்.எம்.எஸ்.எஸ். தரவரிசையில் பி.எஸ்.எல்.வி.விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களை கண்டறியும் பாதுகாப்பு கருவியை முதற்கட்டமாக 500 பேருக்கு வழங்க முடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்தியா நிலவு குறித்த ஆராய்ச்சியில் இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன் -1 திட்டம் என்று கூறலாம். நிலவின் வட்டப் பாதையில் சந்திராயன் -1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன் 1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம் மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன் -2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லேண்ட் ரோவர், சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்தக் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்கச் செய்வது என்று இப்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சந்திராயன் கருவிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களை ஆய்வு செய்வதற்காக, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது. மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லாம், திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் பூமியில் இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நிலவில் தனது பணியை சந்திராயன்- 2 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன் 2013- இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது குறிபிடத்தக்கது. 

Trending News