புதுவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு!!

Last Updated : Jan 20, 2017, 01:26 PM IST
புதுவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு!! title=

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஓன்று சேர்ந்து "போராளிகள்" குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.

தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது. அரசு பஸ்கள், ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் 90 சதவீதம் ஓடவில்லை தனியார் பள்ளிகள் 90 சதவீத அளவு மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் முழு அளவில் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை.

Trending News