தமிழகத்தில் வரும் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்..!!

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அதிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேராளவில், தொற்று பதிப்பு 30,000 என்ற நிலையிலே இருந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2021, 12:03 PM IST
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்..!! title=

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அதிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேராளவில், தொற்று பதிப்பு 30,000 என்ற நிலையிலே இருந்து வருகிறது. 

நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பாலான தொற்று பாதிப்புகள் கேரளாவில் தான் பதிவாகின்றன. இந்நிலையில், மூன்றாம் அலை குறித்த அச்சமும் உள்ளதால், மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி, கொரோனா பரவல் (Coronavirus) அதிகமாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில், கடந்த 12ம் தேதி தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, 28 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஞாயிற்றூக்கிழமை , அதாவது செப்டெம்பர் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்புசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ALSO READ: வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள, முன் வர வேண்­டும் என்று சுகா­தா­ரத்­துறை மா.சுப்ரமணியன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,195 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,473 ஆக உள்ளது.

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News