ராமேஸ்வரம்-அயோத்தி ரயில் சேவையை மோடி திறந்து வைத்தார்

Last Updated : Jul 27, 2017, 01:32 PM IST
ராமேஸ்வரம்-அயோத்தி ரயில் சேவையை மோடி திறந்து வைத்தார் title=

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களின் துவக்க விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரம் - அயோத்தி இடையேயான புதிய ரயில் சேவை மற்றும் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

Trending News