கோவை கார் வெடிப்பிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?

கோவை கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான முயற்சியா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 25, 2022, 03:21 PM IST
  • கோவையில் நடந்த கார் சிலண்டர் வெடிப்பு.
  • 5 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.
  • தீவிர வாதிகள் சதியா என போலீசார் விசாரணை.
கோவை கார் வெடிப்பிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?  title=

கோவை கார் வெடி விபத்து சம்பந்தமாக சென்னை தியகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது, ISIS முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுரவி உள்ளனர் என தெரிவித்தார், விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸ்சில் IF THE NEWS ABOUT MY DEATH REACHES YOU ,FORGIVE MY MISTAKE , HIDE MY SHORTCOMING ,PARTICIPATE IN MY JANASA AND PRAY FOR ME. ((என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள்,என்னுடைய இறுதி சடங்கில் பங்கேருங்கள் என பதிவு செய்துள்ளார் ,இது ISIS அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம் இது காவல்துறையிடம் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க |  கோவை வெடிவிபத்து : தற்கொலை படையா... பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டமா? - சைலேந்திபாபு விளக்கம்

Annamalai

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான், நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை, அப்படி நடந்து இருந்தால் ஆட்சி கலைக்கப்பட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தார்.  கோவையில் நடைபெற்ற வெடி விபத்து தற்கொலை தாக்குதல் தான் என காவல்துறை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய அவர் இந்த விவகாரத்தில் தற்போது 5 நபர்களை கைது செய்துள்ள நிலையில், எதற்காக கைது செய்துள்ளோம் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த விவரங்களும் அதில் இல்லை.  மேலும் இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அதனை வெளியிட காவல்துறை மறுப்பது ஏன் எனவும் யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்து உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது, உள்துறை அதிகாரிகள் செயலிழந்து உள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு மீண்டும் முந்தைய அதிமுக திமுக ஆட்சிகளில் இருந்ததை போல நல்ல அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.  இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் இந்த செய்தி எவ்வாறு திரிக்கபடுகிறது, தமிழகத்தில் கூடுதலாக NIA அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்த அவர், இரண்டு நாட்களில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க |  கோவை சிலிண்டர் வெடிப்பு... சிக்கியது சிசிடிவி காட்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News