உள்ளாட்சித் தேர்தல் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும்

தமிழகத்தில் மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Last Updated : Feb 20, 2017, 12:35 PM IST
உள்ளாட்சித் தேர்தல் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் title=

சென்னை: தமிழகத்தில் மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தப்போவதாக கோர்ட் கேள்வி எழுப்பினர். அதற்கு மாநில தேர்தல் அதிகாரிகள், உள்ளாட்சித் தேர்தலை மே 15-ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினர். 

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச தேதி தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News