85% ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

Last Updated : Aug 11, 2017, 02:37 PM IST
85% ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் title=

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% எம்பிபிஎஸ் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னைஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. 

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

விசாரணைக்கு வந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தனி நீதிபதி தனது தள்ளுபடி செய்தார். அப்பொழுது நீதிபதிகள் கூறியது, இட ஒதுக்கீடு என்பது சமமற்ற நிலையை உருவாக்கும். தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காத வகையில் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டு என ஐகோர்ட் நீதிபதிகள் கூறினார்கள்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, 85% உள் ஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்து செய்தது செல்லும் என்று உத்தரவிட்டனர்.

Trending News