வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் - அண்ணாமலை

பெரிய நிறுவனங்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான் மின் கட்டணம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 22, 2022, 07:47 PM IST
  • அர்ஜுன மூர்த்தி இன்று பாஜகவில் இணைந்தார்
  • இதற்கான நிகழ்ச்சி கமலாலயத்தில் நடந்தது
  • பாஜக சித்தாந்தம் உடையவர்களுக்கு கட்சியில் இடம் உண்டு என அண்ணாமலை பேச்சு
 வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் - அண்ணாமலை title=

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அதன் தலைவருமான அர்ஜுன மூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இன்று இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய நிறுவனங்கள், சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறை நிறுவனங்கள் என அனைவரிடமும் பேரம் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த நாடகமே ஆங்காங்கே வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான். மக்களிடம் சென்று கருத்து கேட்கின்றோம், அதன்மூலமாக ஏற்றிய மின் கட்டணத்தில் ஒரு பகுதியை குறைப்பது என்று சொல்வது திமுக கட்சியின் மின்துறை அமைச்சர் அனைத்து பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒரு வசூல் வேட்டை நடத்துவதற்காக போடப்படும் கபட நாடகம்தான் மக்களிடம் கருத்து கேட்பது. எனவே, இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இதுதான் பாஜகவின் கோரிக்கை.

Arjuna

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளதாக காவல் துறை பதிவில் பதிவாகியுள்ளது. ஆனால், முதலமைச்சரோ கருத்து கேட்பதாக கூறுகிறார். தொடர்ந்து என்ன கருத்து கேட்கிறார் என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மியை மாநில அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். கருத்து கேட்டு காலம் தாழ்த்தாமல், இனி  யாரேனும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டால், அவர்களின் ரத்தம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மீதும் மற்றும் முதல்வரின் கையிலும்தான் இருக்கும். அவர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு முதல்வர் உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும்: செந்தில்பாலாஜி காட்டம்!

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, ஆட்சியாளர்கள் இலவசங்கள் குறித்து அறிவித்து எப்படி ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தொடர்பான விவாதமே தவிர, குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமையை இலவசம் என்று யாரும் பேசவில்லை. பிரதமர் மோடி கொடுத்த வீடு, கேஸ் உள்ளிட்டவை எல்லாம் இலவசங்கள் கிடையாது” என்றார்.

மேலும் படிக்க | பம்புக்கு மேல் ரோடு: அலப்பறை செய்த அதிமுக ஒப்பந்ததாரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News