ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனு தள்ளுபடி: ஐகோர்ட்

Last Updated : Oct 4, 2017, 02:30 PM IST
ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனு தள்ளுபடி: ஐகோர்ட்  title=

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

சென்னை ஐகோர்ட்டு இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றது. இன்று விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்தது. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் செல்லும் என குறிப்பிட்டது.

Trending News