இபிஎஸ், ஓபிஎஸ் தானாக பதவி விலக வேண்டும்: தினகரன்

Last Updated : Aug 30, 2017, 01:07 PM IST
இபிஎஸ், ஓபிஎஸ் தானாக பதவி விலக வேண்டும்: தினகரன் title=

சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசிய அளித்தார் அப்போது, 

அணிகள் இணைந்தாலும் சசிகலா தான் பொது செயலாளர். முதல்வர் தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று தான் அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த ஆதாயத்திற்காகவும் கோரிக்கை விடுவிக்கவில்லை. துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக விடமாட்டோம்.

கட்சித் தலைமையில் பிரச்சனை இல்லை, ஆட்சித் தலைமையில் தான் பிரச்சனை. தனக்கு 40 எம்.எ.ஏக்களுக்கு மேல் ஆதரவு இருப்பதாகவும் எடப்பாடி அணியிலுள்ள ஸ்லீப்பர் எம்.எல்.ஏக்கள் கூடிய விரைவில் தங்கள் அணியில் வந்து இணைவார்கள் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

Trending News