திருச்சி: 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பலி

Last Updated : Sep 3, 2017, 09:18 AM IST
திருச்சி: 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பலி title=

திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது. 

மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து பலத்த காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Trending News