ஆர்கேநகர் இடைத்தேர்தல்: மதிமுக புறக்கணிப்பு!!

ஆர்கேநகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாக இன்று வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Last Updated : Mar 19, 2017, 03:58 PM IST
ஆர்கேநகர் இடைத்தேர்தல்: மதிமுக புறக்கணிப்பு!! title=

சென்னை: ஆர்கேநகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாக இன்று வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்பு மனு தாக்கல், 16-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23-ம் தேதி கடைசி நாளாகும்.  24-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்ப பெற விரும்புவோர் 27ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற வேண்டும். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 12-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

இந்தத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ப.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் மதிமுக உயர்மட்டக்குழு ஆலோசனைக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்கேநகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது. ஆர்கேநகர் தொகுதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News