ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் டிடிவி போட்டியிடுவாரா?

Last Updated : Oct 23, 2017, 02:08 PM IST
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் டிடிவி போட்டியிடுவாரா? title=

இன்று இரட்டைஇலை விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

ஜெ., மரணம் தொடர்பாக நீதி விசரணை கோரியவர்கள் எல்லாம் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிகொண்டனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் சென்றால் கட்சியும் சின்னமும் அழிந்துவிடும்.

முதலவர், துணை முதல்வர் அணிகள் சமர்பித்த பிரமாண பத்திரங்களின் குறைபாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்படும். 

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பங்கேற்பது குறித்து முடிவுகள் எடுத்தாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News