சென்னை முதியோர் இல்லத்தில் வசிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர்!

சென்னையில் குருகுலம் முதியோர் இல்லத்தில், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேசன் வசித்துவருகின்றார்!

Last Updated : Jan 11, 2018, 05:36 PM IST
சென்னை முதியோர் இல்லத்தில் வசிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர்! title=

சென்னை: இந்தியாவில் தேர்தல் வழிமுறைகளில் நடைப்பெற்ற சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு முன்நின்றவர் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேசன், தற்பொழுது சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார்.

சென்னையில் குருகுலம் முதியோர் இல்லத்தில் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் அவர் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேசன் மற்றும் அவருடைய மனைவி கவணிக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

கேரளாவின் பாலக்காட்டு பகுதியில் தங்களுக்கென தனி வீட்டை கொண்டிருந்த போதிலும், அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாததால் முதுமை காலத்தில் தங்கள் வாழ்வை பார்த்துக்கொள்ள இந்த முடிவை எடுத்திருக்ககூடும் என தெரிகிறது.

முதியோர் இல்லத்தில் வசிப்பதில் எந்தவித கஷ்டமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சான்றாக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி, அவரது பிறந்தநாளினை, அந்த குருகுலம் முதியோர் இல்லம் சிறப்பாக கொண்டாடியுள்ளது.

தங்களக்கு கிடைக்கும் வருமானத்தில், இத்தம்பதியினர் தங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அந்த இல்லத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி உதவுகிறார்கள்.

Trending News