கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல்!

கர்நாடக மாநில சட்டபேரவைக்கு வரும் மே 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.  

Last Updated : Apr 17, 2018, 12:32 PM IST
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல்! title=

கர்நாடக சட்ட சபைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முன் அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

இதையடுத்து, தேர்தலுக்கு பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது.

இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Trending News