திருச்சி சமயபுரம் கோவில் யானை தாக்கி; பாகன் பரிதாப பலி!

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை மிதித்ததில் அவர் சம்பவயிடத்திலேயே பலியானார்!

Last Updated : May 25, 2018, 12:18 PM IST
திருச்சி சமயபுரம் கோவில் யானை தாக்கி; பாகன் பரிதாப பலி! title=

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை மிதித்ததில் அவர் சம்பவயிடத்திலேயே பலியானார்!

திருச்சி மாநாகரில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் யானைக்கு இன்று திடீரென மதம் பிடித்தது. இதனால் தங்களை உயிரை காப்பாற்றிக்கொள்ள பக்தர்கள் அலரியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் மதம் பிடித்த யானை மசினி-யை அடக்க முயன்ற யானை பாகன் கஜேந்திரன் யானையிடம் மிதிப்பட்ட பலியாகினார்.

இச்சம்பவத்தில் கோவில் வந்திருந்ந பக்தர்களில் 8 போ் காயமடைந்தனா். மேலும், அந்த பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 போ் கவலை கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடைச் சாத்தப்பட்டுள்ளது. கோவிலினுள் இருந்த பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி வெளியேற்றப்பட்டனர். மேலும் மதம் பிடித்த யானையினை சாந்தப்படுத்த தர்பூசணி, கரும்புப் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது!

Trending News