தாய்வான் தீவிபத்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

தாய்வான் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது, மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2018, 02:05 PM IST
தாய்வான் தீவிபத்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு! title=

தாய்வான் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது, மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்!

தாய்வான் தலைநகர் தாய்பீய்-ல் அடுக்குமாடி மருத்துவமனை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவமனை கட்டிடத்தின் 7-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தின் போது கட்டிடத்தில் 3 பணியாளர்கள் உள்பட 36 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 16 இதய நோயாளிலகளும் அடங்குவர்.

விபத்தின் போது நோயாளிகளுக்கு ஏற்பட்ட மூச்சு தினறல் காரணமாக 9 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தினை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவமனை ஊழியர்கள் முயன்ற காட்சிகளின் CCTV வீடியோவினை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி., ஆக்ஸிஜன் டேங்க் வெடிப்பின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என தெரிகிறது.

Trending News