7வது ஊதியக்குழு: இது நடக்காதாம், ஊழியர்களுக்கு ஷாக்... மாநிலங்களவையில் கிடைத்த 2 முக்கிய செய்திகள்!!

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) அடிப்படைச் சம்பளத்தில் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 20, 2025, 09:58 PM IST
  • மத்திய அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கை.
  • மத்திய அமைச்சர் அளித்த பதில் என்ன?
  • முக்கிய அப்டேட் இதோ.
7வது ஊதியக்குழு: இது நடக்காதாம், ஊழியர்களுக்கு ஷாக்... மாநிலங்களவையில் கிடைத்த 2 முக்கிய செய்திகள்!!

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வந்தது. தற்போது அரசு சார்பில் இதற்கான பதில் வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அரசு இதற்கு தெளிவான பதிலை அளித்துள்ளது. அரசாங்கம் கூறியது என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கை

ஊழியர் அமைப்புகள் அடிப்படைச் சம்பளத்தில் அகவிலைப்படியைச் சேர்க்கக் கோரி வருகின்றன. அகவிலைப்படி 50% -க்கும் அதிகமாக அதிகரித்து விட்டதால், ஊழியர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையுடன் (DoPT) ஒரு சந்திப்பை நடத்தியது. இதிலும், அகவிலைப்படியை இணைப்பதாக கூறப்பட்டது.

Rajya Sabha: மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) அடிப்படைச் சம்பளத்தில் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. மாநிலங்களவையில் இது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வ பதில் வந்துள்ளது.

அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத அகவிலைப்படியை சேர்க்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் கோரி வந்தன. ஆறாவது ஊதியக் குழுவும் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் இணைக்க வேண்டாம் என்று பரிந்துரைத்திருந்தது. அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்

ஊழியர்கள் தொடர்பான இந்தக் கேள்விக்கு, நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி செவ்வாயன்று, அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படியை இணைப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் நிலுவையில் இல்லை என்று கூறினார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படுகிறது.

திட்டத்தை நிராகரித்த அரசு

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை ஓய்வூதியத்தில் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள காரணங்களையும் அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது. இது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் அரசாங்கம் பதிலளித்துள்ளது.

8th Pay Commission: 8வது ஊதியக் குழு பற்றிய முக்கிய அப்டேட்

மறுபுறம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதியக்குழு பற்றி சில பெரிய தகவல்களை வழங்கியுள்ளார். 8வது ஊதியக் குழுவால் சுமார் 36 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தவிர, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இதன் பலனைப் பெறுவார்கள். புதிய ஊதியக் குழுவை விரைவில் அமைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | அலர்ட்.. ஏப்ரல் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்.. முழு விவரம் இதோ!

மேலும் படிக்க | UPS முக்கிய செய்தி: சந்தாதாரர்கள் ஓய்வூதியத் தொகையில் 50% பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் - PFRDA

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News