7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய செய்தி. மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் பல வகையான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, இந்தப் படிகள் 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
Allowances: ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவுகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் பல, ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் இப்போது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அலவன்சை ஆண்டுக்கு இரண்டு முறை வழங்க முடிவெடுத்துள்ளது. ஊழியர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். மேலும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் இது அவர்களுக்கு உதவும். ஊழியர்களைத் தவிர, ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசு பல வகையான சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Finance Ministry: நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை
சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சீருடை கொடுப்பனவில் பல கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆடை கொடுப்பனவில் உபகரண கொடுப்பனவும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை ஆடை கொடுப்பனவு கிடைக்கும். முன்னதாக, இது ஒரு முறை மட்டுமே கிடைத்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை ஒரு விதியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகையாக எவ்வளவு கிடைக்கும்?
சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, பல துறைகளின் மத்திய ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 சீருடை கொடுப்பனவைப் பெற உரிமை உண்டு. இவர்களில் பாதுகாப்பு சேவைகள், CAPFகள், ரயில்வே பாதுகாப்புப் படை, யூனியன் பிரதேச காவல் படைகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய ரயில்வேயின் நிலைய மேலாளர்கள் ஆகியவற்றில் அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள அனைத்து பணியாளர்களும் அடங்குவர்.
Uniform Allowance: இந்த ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு கிடைக்கும்
ஆடை கொடுப்பனவு பெறுபவர்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். இவர்களில் டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் சேவையின் இராணுவ நர்சிங் சேவை (MNS ஆடை கொடுப்பனவு) அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ACPக்கள், சுங்கத்துறை, மத்திய கலால் மற்றும் போதைப்பொருள் துறையின் நிர்வாக ஊழியர்கள், இந்திய நிறுவன சட்ட சேவையின் அதிகாரிகள், NIA சட்ட அதிகாரிகள், அமிர்தசரஸ் உட்பட நான்கு பெருநகரங்களின் குடிவரவு பணியாளர் பணியகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோர் அடங்குவர்.
ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை
முன்னதாக, ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த சேவைகளில் சேர்ந்த ஊழியர்கள் ஆடை கொடுப்பனவுக்காக சுமார் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு ஒரு முறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஊழியர்கள் அதிகம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. புதிய விதிகளின்படி, சீருடை கொடுப்பனவைக் கணக்கிட ஒரு குறிப்பிட்ட சூத்திரம் பயன்படுத்தப்படும், மேலும் அது விகிதாசார அடிப்படையில் கணக்கிடப்படும். ஊழியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு! மே 1 முதல் அதிகரிக்கும் கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









