7th Pay Commission Dress Allowance: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. ஆடை கொடுப்பனவு தொடர்பாக மத்திய அரசு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஒரு முக்கியமான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த உத்தரவு
இப்போது ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் நியமிக்கப்படும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், வருடாந்திர மொத்தத் தொகைக்குப் பதிலாக மாதாந்திர விகிதத்தின் அடிப்படையில் (புரோ-ராட்டா) ஆடை கொடுப்பனவு கிடைக்கும். பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம் இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்தப் புதிய விதி பார்க்கப்படுகின்றது.
Dress Allowance: இதுவரை ஆடை கொடுப்பனவு எப்படி கிடைத்துக்கொண்டிருந்தது
தற்போது, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில், அதே ஆண்டின் எந்த மாதத்தில் சேர்ந்தாலும், ஆண்டு முழுவதும் ஆடை கொடுப்பனவை மொத்தமாகப் பெறுகிறார்கள். அதாவது, மார்ச் மாதத்தில் ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டால், ஜூலை மாதத்தில் முழு ஆண்டுக்கான தொகையையும் அவர் பெறுவார். புதிய ஊழியர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் சேவையின் ஆரம்ப மாதங்களுக்கும் முழு ஆண்டு கொடுப்பனவைப் பெற்றனர்.
புதிய விதியால் வந்துள்ள மாற்றம் என்ன?
ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக் காலத்திற்கு ஏற்ப ஆடை கொடுப்பனவு வழங்கப்படும். அதாவது வருடாந்திர கொடுப்பனவின் அளவு 12 மாதங்களாகப் பிரிக்கப்படும். பின்னர், நியமன மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் 30 வரையிலான சேவை மாதங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மொத்தத் தொகை தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக, அக்டோபர் 2025 இல் ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டால், அக்டோபர் முதல் ஜூன் வரை 9 மாதங்களுக்கு ஆடை கொடுப்பனவு அவருக்குக் கிடைக்கும். இந்த மாற்றம் புதிய ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு, பழைய விதிகள் தொடரும். இது புதிய மற்றும் பழைய ஊழியர்களிடையே சமமான விநியோகம் இருப்பதை உறுதி செய்யும்.
Retiring Employees: ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இதனால் என்ன தாக்கம் ஏற்படும்?
ஜூலை 1, 2025 க்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஆடை கொடுப்பனவுக்கான தற்போதைய விதிகள் அப்படியே இருக்கும் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதேபோல், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் தற்போது வரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
டிசம்பர் அல்லது அதற்கு முன் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரை வருடத்திற்கு ஆடை கொடுப்பனவு கிடைக்கும். அதே நேரத்தில், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு முழு வருடாந்திர கொடுப்பனவு வழங்கப்படும்.
இருப்பினும், பணி ஓய்வு தொடர்பான இந்த விதிகள் எதிர்காலத்தில் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்த விதிகளை அவ்வப்போது புதுப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஆடை கொடுப்பனவின் அளவில் எந்த மாற்றமும் இல்லை
புதிதாக சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆடை கொடுப்பனவு வழங்கப்படும் கால அளவில் மாற்றம் செய்யப்பட்டாலும், மொத்த ஆடை கொடுப்பனவின் அளவில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. 7வது ஊதியக் குழுவின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகள் முன்பு போலவே தொடரும்:
பணியாளர் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் ஆண்டு ஆடை கொடுப்பனவு தொகை
- பொது ஊழியர்கள் - ரூ.5,000
- சீருடை அணியும் ஊழியர்கள் - ரூ.10,000
- ஆயுதப்படைகள் போன்ற சிறப்பு சேவைகள் - ரூ.20,000
மேலும் படிக்க | Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









