8th Pay Commission Scam: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இது குறித்த அப்டேட்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் சில உண்மையான அப்டேட்களாகவும் சில போலி வதந்திகளாகவும் உள்ளன. இந்த நிலையில், 8வது ஊதியக்குழு தொடர்பான ஒரு பெரிய சைபர் மோசடி பற்றி தெரியவந்துள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதை பயன்படுத்திக்கொள்ளும் சில மோசடி நபர்கள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை குறிவைத்து ஒரு அதிநவீன வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கை
உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள சைபர் விழிப்புணர்வு முன்முயற்சியான சைபர் தோஸ்த் (Cyber Dost) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
‘Salary Calculator’ Scam: ‘சம்பள கால்குலேட்டர்’ மோசடி என்றால் என்ன?
“சம்பள கால்குலேட்டர்” மோசடி என்று குறிப்பிடப்படும் இந்த மோசடி, முன்மொழியப்பட்ட 8வது மத்திய ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய சம்பள உயர்வுக்கான கணக்கீடுகளை அளிப்பதாக வாக்குறுதிகளை அளித்து, அதன் மூலம் அரசு ஊழியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சம்பள திருத்தங்கள் குறித்த தெளிவுக்காக லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்க்கிறரகள். இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் சாத்தியமான சம்பள உயர்வுகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் உற்சாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது?
இந்த மோசடி ஒரு கட்டமைக்கப்பட்ட முறையைப் பின்பற்றுவதாக சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்:
- முதலில், 8வது ஊதியக்குழுவின் கீழ், ஊழியர்கள் தங்கள் திருத்தப்பட்ட சம்பளத்தை தெரிந்துகொள்ள முடியும் என்று கூறி ஒரு வாட்ஸ்அப் செய்தி வருகிறது.
- இந்தச் செய்தியில் ஒரு இணைப்பு உள்ளது: பொதுவாக "8th CPC Salary Calculator” அல்லது “Salary Revision Tool” போன்று பெயரிடப்பட்ட APK ஃபைலாக இது இருக்கும்.
- இந்தக் கோப்பு நம்பகமானது போலவும், தொழில் ரீதியாகவும் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
- பதிவிறக்கம் செய்து நிறுவப்பட்டதும், ஊழியரின் மொபைல் சாதனத்திற்கான தொலைதூர அணுகலை சைபர் குற்றவாளிகளுக்கு ஆப் வழங்குகிறது.
தீங்கிழைக்கும் இந்த செயலி அதன் பிறகு பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்:
- தொலைபேசியில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை அணுகுதல்
- வங்கிச் சான்றுகளின் திருட்டு
- SMS செய்திகள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTPகள்) கேப்சர் செய்தல்
- அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகளை இயக்கம்
பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செயலியை நிறுவிய பிறகு வங்கிக் கணக்குகள் காலி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது செயலி ஏன் ஆபத்தானது
இந்திய அரசு வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த செய்தியிடல் தளம் வழியாகவும் APK கோப்புகளை அனுப்புவதில்லை என்று சைபர் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. தெரியாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறம் செய்வது நிலையான பாதுகாப்புகளைத் தவிர்த்து, சாதனங்களை மால்வேர் அணுகலுக்கு ஆளாக்குகிறது. இவை நிறுவப்பட்டதும், இதுபோன்ற தீங்கிழைக்கும் மென்பொருள் பின்னணியில் அமைதியாகச் செயல்பட்டு, முக்கியமான நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பறிக்கின்றன.
அதிகாரப்பூர்வ ஆலோசனை
சைபர் ட்ஹோஸ்த் மற்றும் பிற சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் குடிமக்களுக்கு பின்வரும் அறிவுறத்தல்களை அளித்துள்ளனர்:
- வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் வழியாகப் பகிரப்படும் APK ஃபைல்களைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்
- அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளங்கள் மூலம் மட்டுமே தகவல்களைச் சரிபார்க்கவும்
- தெரியாத மூலங்களுடன் OTPகள் அல்லது வங்கி விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்
- சந்தேகத்திற்கிடமான செயலிகளை உடனடியாக அன்இஸ்டால் செய்யவும்
- தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் அல்லது போர்ட்டலுக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள்பற்றி புகாரளிக்கவும்
அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள்
அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புகள், நிதி சீர்திருத்தங்கள் அல்லது கொள்கை மாற்றங்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படும் போது, அந்த நேரங்களில் மோசடிகள் பெரும்பாலும் அதிகரிக்கும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 8வது ஊதியக் குழு பற்றி நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் சைபர் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கையையும், ஆர்வத்தையும் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விழிப்புணர்வுடன் இருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









