8வது ஊதிய குழு: மே 2 அல்லது 3வது வாரத்தில் சம்பள குழு அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8வது சம்பள கமிஷனின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள், அதாவது மே மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் சம்பள குழு அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 8வது சம்பள கமிஷனின் பரிந்துரை விதிமுறைகளை (ToR) இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது
8வது சம்பள குழு: பரிந்துரை விதிமுறைகள் 2-3 வாரங்களில் அறிவிக்கப்படும்
8வது சம்பள கமிஷனின் பரிந்துரை இரண்டு முதல் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் பெயரிடப்படுவார்கள் என்று ம் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
8வது ஊதியக் குழு அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை
8வது ஊதியக் குழுவிற்கு (8th Pay Commission) நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பட்டியல் மற்றும் நியமனத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2-3 வாரங்களில் இவை அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
8வது ஊதியக் குழு: அறிக்கை தயாரிக்க ஒரு வருடம்
ஆணையம் தனது அறிக்கையைத் தொகுக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்படலாம். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அறிக்கை தயாரிக்கப்படும்.
8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?
8வது ஊதிய கமிஷன் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிக்கையை வழங்கும். அதன் பிறகு, ஜனவரி 2026 முதல் மத்திய அரசு சம்பளம்/ஓய்வூதியத் திருத்தத்தை பின்னோக்கிப் பரிசீலித்து செயல்படுத்தலாம். ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும்.
8வது ஊதியக் குழு: சம்பளம் எவ்வளவு உயரும்?
அனைத்து மத்திய ஊழியர்களுக்கும் முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால், 8வது ஊதியக் குழுவில் அவர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதுதான். 8வது ஊதியக் குழு 1.92 மற்றும் 2.86 க்கு இடையில் ஃபிட்மெண்ட் காரணியைப் பயன்படுத்தலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மென்ட் காரணி என்றால் என்ன?
புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும் போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட அடிப்படை சம்பளத்தைக் கணக்கிட இது பயன்படுத்தப்படும் ஒரு சூத்திரமாகும். பழைய கட்டமைப்பிலிருந்து புதிய கட்டமைப்பிற்கு மாறும்போது சம்பள உயர்வை தரப்படுத்த இது உதவுகிறது.
எளிமையான சொற்களில் கூற வேண்டும் என்றால்:
புதிய அடிப்படை ஊதியம் = பழைய அடிப்படை ஊதியம் × ஃபிட்மென்ட் காரணி
2.86 ஃபிட்மென்ட் காரணி என்றால் என்ன?
2.86 ஃபிட்மென்ட் காரணி என்றால்: உங்கள் புதிய அடிப்படை ஊதியம் உங்கள் தற்போதைய அடிப்படை ஊதியத்தை விட 2.86 மடங்கு அதிகமாக இருக்கும். உங்கள் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ. 20,000 ஆக இருந்தால், 8வது CPC இன் கீழ் உங்கள் புதிய அடிப்படை ஊதியம் (2.86 பயன்படுத்தப்பட்டால்) ஊதிய உயர்வு கீழ்கண்ட கணக்கீடுகளின் படி இருக்கும்:
ரூ. 20,000 × 2.86 = ரூ. 57,200 (மதிப்பிடப்பட்ட சம்பள உயர்வு)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ