8வது ஊதியக்குழு: மிடில் கிளாசுக்கு தீபாவளி பரிசா? வருமா 'அந்த' முக்கிய அப்டேட்

8th Pay Commission Implementation: இந்த ஆண்டின் தீபாவளி ஆச்சரியத்தைக் கொண்டு வருமா? 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளிவருமா? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2025, 05:11 PM IST
  • காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்கள்.
  • குழப்பத்தில் மத்திய அரசு ஊழியர்கள்
  • சம்பள உயர்வை எப்போது எதிர்பார்க்கலாம்?
8வது ஊதியக்குழு: மிடில் கிளாசுக்கு தீபாவளி பரிசா? வருமா 'அந்த' முக்கிய அப்டேட்

8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவிற்கான எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமலுக்கு வருகின்றன. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 -இல் நிறைவடையும். ஜனவரி 2026 முதல் அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். இதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான நேரமே மீதமுள்ள நிலையில், குழப்பங்களும் கேள்விகளுமே அதிகமாக உள்ளன.

Add Zee News as a Preferred Source

Middle Class: காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்கள்

மத்திய அரசு ஊழியர்களில் நடுத்தர வர்க்கம் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது. ஊதிய திருத்தத்தின் அதிகப்படியான தாக்கமும் இவர்களிடம் தான் காணப்படுகின்றது. ஆகையால் அடுத்த ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக இந்த பிரிவில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

Central Government Employees: குழப்பத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜனவரி 16, 2025 அன்று 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அரசாங்கம் இன்னும் குழுவின் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யவில்லை. மேலும் ஊதிய கட்டமைப்புகள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் உட்பட குழுவின் பணி நோக்கத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு முக்கிய ஆவணமான குறிப்பு விதிமுறைகள் (ToR) அரசாங்கம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ToR இல்லாமல், ஆணையம் அதன் பணியைத் தொடங்க முடியாது. ஆகையால் இந்த தீபாவளிக்குள் ToR பற்றிய முக்கிய அப்டேட் கிடைக்கும் என வெகுவாக நம்பப்படுகின்றது.

Salary Hike: சம்பள உயர்வை எப்போது எதிர்பார்க்கலாம்?

வரலாற்று ரீதியாக, ஊதியக் குழுக்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து செயல்படுத்தப்படுவதற்கு சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். உதாரணமாக, பிப்ரவரி 2014 இல் மன்மோகன் சிங் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட 7வது சம்பளக் குழு, நவம்பர் 2015 இல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பிறகு திருத்தப்பட்ட சம்பள விகிதங்கள் வழக்கமான மூன்று ஆண்டு சுழற்சியைத் தொடர்ந்து ஜனவரி 2016 முதல் நடைமுறைக்கு வந்தன.

8வது சம்பளக் குழு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கினால், அதன் இறுதி அறிக்கை 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ தயாராகும். அதாவது ஊழியர்கள் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோதான் திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைப் பெறத் தொடங்குவார்கள்.

ஒவ்வொரு ஊதியக் குழுவும் ஒரு விரிவான ஆணையைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் ஊதியக்குழுக்கள் அவற்றின்  பணியை முடிக்க 18–24 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. அதன் பிறகு மத்திய அரசு அதை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளிக்க 6–12 மாதங்கள் ஆகும்.

7வது சம்பளக் குழு, மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய சேவைகள் அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் முதல் ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்கள் வரை பல்வேறு வகையான ஊழியர்களுக்கு பரிந்துரைகளை வழங்கியது.

நடுத்தர வர்க்கத்தினரின் காத்திருப்பு

இந்தியாவின் பரந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக கிட்டத்தட்ட 1.2 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டில், நிதி நிவாரணம் வழங்குவதையும் நுகர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
2025–26 மத்திய பட்ஜெட்டில், அரசாங்கம் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு ஒரு பெரிய வருமான வரி நிவாரணத்தை வழங்கியது. இதன் மூலம் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ள அனைத்து வரி செலுத்துவோரும் வரியிலிருந்து விடுபட்டனர். 

பின்னர், ஆகஸ்ட் 15, 2025 அன்று, பிரதமர் மோடி ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் மூலம் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 'இரட்டை தீபாவளி பரிசை' அறிவித்தார். இந்த நடவடிக்கை ஜிஎஸ்டி கவுன்சிலால் விரைவாக அங்கீகரிக்கப்பட்டது.

பண்டிகை கால அறிவிப்புகள் பொதுவாக விரைவாக செய்யப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, 8வது ஊதியக்குழு தொடர்பான ஊகங்கள் இயல்பாகவே உருவாகி வருகின்றன. இந்த ஆண்டின் தீபாவளி மற்றொரு ஆச்சரியத்தைக் கொண்டு வருமா? 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளிவருமா? ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு பற்றிய குறிப்புகள் கிடைக்குமா? ToR அப்டேட் கிடைக்குமா? இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களின் காத்திருப்பு நீள்கிறது. தீபாவளி பரிசாக மத்திய அரசு 8வது ஊதியக்குழு தொடர்பான ஒரு முக்கிய அப்டேட்டை அளிக்கும் என்பது அவர்களது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடேங்கப்பா!!! அரசு ஊழியர்களுக்கு 92%-186% சம்பள உயர்வு, கணக்கீடு இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு அமலாக்கம் எப்போது? 18 மாத அரியர் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு அசத்தலான அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News