8வது ஊதியக்குழுவில் அதிரடி ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்: Goldman Sachs கணிப்பு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2025, 12:10 PM IST
  • ஊதிய உயர்வு குறித்து கோல்ட்மேன் சாக்ஸ் அளித்த மதிப்பீடு என்ன?
  • சம்பள உயர்வை மதிப்பிடுவதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு பகுப்பாய்வை நடத்தியது.
  • இதன் விவரங்களை இங்கே காணலாம்.
8வது ஊதியக்குழுவில் அதிரடி ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்: Goldman Sachs கணிப்பு இதோ

8th Pay Commission: இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக அமைந்தது. அடுத்தது குழுவின் உருவாக்கத்திற்காகவும், குழுவின் பரிந்திரைகளுக்காகவும் அனைவரும் காத்திருக்கிறார்கள். 

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

இந்த நிலையில் 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு இருக்கும் என்பது குறித்து பல ஊகங்கள் பரவிய வண்ணம் உள்ளன. அடிப்படை ஊதியம் அதிகரிக்க முக்கிய காரணியாக கருதப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்தும் பல சர்ச்சைகள் உள்ளன.

Goldman Sachs: ஊதிய உயர்வு குறித்து கோல்ட்மேன் சாக்ஸ் அளித்த மதிப்பீடு

இதற்கிடையில் பல நிதி நிறுவனங்களும் நிபுணர்களும் 8வது சம்பள கமிஷனுக்கு பிறகு ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றி தங்கள் மதிப்பீடுகளை வெளியிட்டு வருகின்றனர். 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய திருத்தத்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று உலகளாவிய நிதிச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

8வது ஊதியக் கமிஷன் ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027 இல் செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 2027 வரை இது தாமதிக்கப்படாது என்றும், 2026 ஏப்ரல் மாதம் முதலே இது அமல்படுத்தப்படும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Salary Hike: சம்பள உயர்வை மதிப்பிடுவதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு பகுப்பாய்வை நடத்தியது.

- தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் வரி இல்லாமல் சராசரி மாத சம்பளமாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். 

- வெவ்வேறு பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில், நிறுவனம் சாத்தியமான ஊதிய உயர்வை கணித்துள்ளது.

- 8வது சம்பளக் குழுவிற்கு அரசாங்கம் ரூ.1.75 லட்சம் கோடியை ஒதுக்கி, இந்தத் தொகையில் பாதியை சம்பள திருத்தத்திற்கும், மீதமுள்ள தொகை ஓய்வூதியத்திற்கும் பயன்படுத்தினால், சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ.1,14,600 ஆக உயரும்.

- ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்தால், சம்பளம் மாதத்திற்கு ரூ.1,16,700 ஆக உயரும்.

- மேலும் ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டால், சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ.1,18,800 ஆக உயரும்.

7th Pay Commission: 7வது ஊதியக்குழு

ஒப்பிடுகையில், 2016 இல் 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தியதால் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது. திருத்தப்பட்ட சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தாலும், அவை உண்மையில் ஜூலை 2016 முதல்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. இது 2016-17 நிதியாண்டைப் பாதித்ததாக கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகிறது.

Fitment Factor: 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்?

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டதும், குழு உறுப்பினர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டர், ஓய்வூதிய திருத்தங்கள், ஓய்வூதிய திருத்தங்கள் மற்றும் பிற விவரங்களைத் தீர்மானிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பார்கள். 7வது ஊதியக் குழுவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டதைப் போலவே, 2.57 அல்லது அதற்கு மேற்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் 8வது ஊதியக்குழுவிலும் நிர்ணயிக்கப்படலாம் என்று ஊழியர் சங்கங்கள் சூசகமாகக் கூறியுள்ளன.

மேலும் படிக்க | ஓய்வூதிய வயதில் மாற்றமா... மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

மேலும் படிக்க | EPF: ஜூன் முதல் நிமிடங்களில் PF பணத்தை எடுக்கலாம், எவ்வளவு எடுக்க முடியும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News